1989

1989 காயிதே மில்லத் பெயர் நீக்கம் - திண்டுக்கல் காக்கப்பட்டது.

1989 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது வெற்றி பெற்றவுடன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு காயிதேமில்லத் பெயரை சூட்டியது . அதைக் கண்டித்து ஹிந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியது . அப்போது மாநில தலைவராக இருந்த அட்வகேட் ராஜகோபாலன் அவர்கள் அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அப்போது மிகுந்த சிரமப்பட்டு இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த நிலை . நிதி பற்றாக்குறை நிலவி வந்த சூழ்நிலை . அந்த மாவட்டம் முழுக்க கிராமம் கிராமமாக சென்று மக்கள் மத்தியில் காயிதே மில்லத் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும், காயிதே மில்லத் பெயர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வைக்கப்பட்டது பற்றி மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி அதன்மூலம் அந்த பெயரை நீக்க மக்கள் களத்தில் இறங்கி போராட செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அப்பொழுது வீரத்துறவி ராமகோபாலன் ஜி அவர்கள் ஆலோசனையின் பேரில் கிராமம் கிராமமாக செல்கிற பொழுது துண்டு பிரசுரம் கொண்டு செல்ல வேண்டும். அதோடு தட்டும் டம்ளரும் கொண்டு செல்ல வேண்டும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அந்த கிராமத்தில் ஏதாவது ஒரு வீட்டில் உணவு கேட்டு வாங்கி சாப்பிட வேண்டும் என்றார். நிதியும் மக்களிடம் வசூலிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது .

வழக்கறிஞராக இருந்த மாநிலத் தலைவர் திரு. ராஜகோபாலன் அவர்கள் தானே முன்வந்து தட்டு எடுத்துக் கொண்டு பல கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து மக்கள் கொடுப்பதை உண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கினார் . அந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் இறுதியில் காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது கண்டித்து திண்டுக்கல்லில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 

காவல்துறை கண்காணிப்பாளராக அப்போது திண்டுக்கல்லில் இருந்தவர் தன்னை பெரியாரின் வாரிசு என்று சொல்லிக்கொண்டவர்.

நாம் அறிவித்த அந்தப் போராட்டத்தை கெடுக்க வேண்டும், போராட்டம் எப்படியும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தார் அந்த காவல்துறை கண்காணிப்பாளர்.

போராட்டத்திற்கு தடை போடப்பட்டது .அந்த போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் யாரும் நுழையாதபடி கடுமையான காவல் போடப்பட்டது. எங்கிருந்தும் யாரும் திண்டுக்கல் நுழைய முடியாத அளவில் பாதுகாப்பு இருந்தது.

அந்த ஆர்ப்பாட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அப்போதைய மாநில பொதுச்செயலாளராக இருந்த திரு.சு.சிதம்பரம் அவர்கள் கண்டக்டர் வேஷத்திலும் திரு.பொன். ராதா கிருஷ்ணன் அவர்கள் மீன் வியாபாரி வேடத்திலும் காவல்துறையை மீறி உள்ளே நுழைந்து குறிப்பிட்ட நேரத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அது ஆளும் கட்சிக்கு முகத்தில் கரியைப் பூசியது போல ஆனது.

அதற்குப் பிறகு திண்டுக்கல் பெரிய கலவர பூமி ஆனது. பேகம்பூர் பகுதியில் முஸ்லிம்கள் மத்தியில் மாட்டிக்கொண்ட சின்னாளப்பட்டி நாகராஜன் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டம் முழுக்க மாபெரும் இந்து எழுச்சி ஏற்பட்டது. திமுக அரசு கவிழ்ந்து தேர்தல் நடைபெற்ற பொழுது காயிதே மில்லத் பெயர் ஒரு முக்கிய பிரச்சனையாக திண்டுக்கல்லில் பேசப்பட்டது. 1991இல் அதிமுக அரசு ஜெயலலிதா தலைமையில் ஆட்சி பொறுப்பெடுத்ததும் திண்டுக்கல்லுக்கு திமுக அரசு வைத்திருந்த காயிதேமில்லத் பெயரை உடனடியாக நீக்கியது.

ஆசியாவிலேயே பெரிய, பிரம்மாண்டமான தேர் திருவாரூர் தேர். திருவாரூர் தேர் அழகு என்ற பேச்சு வழக்கு இன்றும் தமிழகத்தில் உண்டு . அந்தத்தேர் ஓடுவதற்கு முன்னும் , பின்னும் புதிதாக சாலை போடப்பட வேண்டும் வேண்டும் என்றால் அதன் எடையை , அமைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் .

உலகப் புகழ் வாய்ந்த புரி ஜகந்நாதர் தேர் அந்த மாநிலத்தில் பெருமைமிகு ஒன்று . அதற்காக தேரோட்டத்தின் வேலைகளை ஓரிஸா மாநில அரசு ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும் . பல லட்சம் பக்தர்கள் அங்கு கலந்துகொள்வார்கள் . அது காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் , பாரதிய ஜனதா , ஜனதா தள அரசாங்கமாக இருந்தபோதும் சரி. மாநில அரசு தனது பெருமையை பல நூறு ஆண்டுகளாக நிலைநிறுத்தி வருகிறது .

ஆனால் அதைவிட பல மடங்கு உயர்வான , புகழ்வாய்ந்த திருவாரூர் தேர் நிறுத்தப்பட்டதே சோக வரலாறு . அதைவிட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல , ஏரோட்டி ஏங்கித் தவிக்கையில் தேரோட்டம் ஏனடா தியாகேசா ! நாத்திக நயவஞ்சகர்கள் எள்ளி நகையாடினார்கள் .

அப்படி அசைக்கவிடாமல் திருவாரூர் தேரை திராவிட கட்சிகள் -ஆட்சியில் ஓரங்கட்டி நிறுத்தி விட்டனர் . வீண் செலவு , வெட்டி விழா .. இது தேவையா என மக்களிடம் பேசி வந்தனர் . திராவிட கட்சிகளின் மெத்தனத்தை பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் கோயிலில் இருந்து கல் தூண்களையும் , தேரில் இருந்த மர சிற்பங்களையும் திருடிக் கொண்டு போயினர் . வக்கற்ற அரசின் இந்து சமய அறநிலையத்துறை வேடிக்கைப் பார்த்தது . நாத்திக அரசியல்வாதிகளின் துணையோடு சிலை கடத்தல் பெரிய வியாபாரமாக தடைபெற்றது .

இந்நிலயில் இந்து முன்னணி துவங்கப்பட்டபோது , வாராது வந்த மாமணி என மக்கள் கொண்டாடி வரவேற்பு கொடுத்ததற்குக் காரணம் இருந்தது . ஒவ்வொரு ஊரிலும் இந்துக்கள் மனங்களில் பொங்கி எழுந்த உணர்ச்சிகள் , அவர்களின் நீண்ட நாட்களாக நீங்காத துயரத்திற்கு வழியை இந்து முன்னணி முன்னெடுத்து தீர்வு காண்டதுதான் . மனுநீதி சோழனால் உருவாக்கப்பட்டு , புகழ் சேர்த்த திருவாரூர் தேரை மீண்டும் ஓட்ட வேண்டும் என்ற விரதத்தை அந்த ஊர் மக்கள் கொண்டிருந்தனர். இது குறித்து இந்து முன்னணி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது . திருவாரூர் தேரை ஓட வைத்தால் மீண்டும் தமிழகத்தில் ஆன்மீக எழுச்சி ஏற்படும் . இதற்கு எல்லா தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கருத்துக் கூறி ஒருங்கிணைப்பு வேலைகள் துவங்கின.

வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் ஒவ்வொரு சமூகத் தலைவர்கள் , ஆன்மீகப் பெரியோர்களை நேரடியாக சந்தித்து எடுத்துக் கூறினார். ஆனால் , அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர்களோ இந்த விஷயத்தை கையில் எடுக்கவே அஞ்சினர் . அவர்கள் கூறிய காரணம் , தேர் தயார் செய்யவே பல கோடி ரூபாய் செலவாகும் , தேர் இழுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வேண்டும் . அது மட்டுமல்ல , தேர் நிலைக்கு வர ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் . இது நடவாத காரியம் என்றனர் . இதைவிட பெரிய குண்டு ஒன்றைப் போட்டனர் , சிலரை ஏவிவிட்டு நாத்திகாவாதிகள் ஏதாவது செய்து கலவரத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்றனர் . அவர்களிடம் கோபால்ஜி நிதி ஏற்பாட்டைப் பற்றி இப்போதைக்கு கவலைப்பட வேண்டாம் , இறைவன் எப்படியாவது வழிகாட்டுவான் எனக் கூறி நம்பிக்கைக் கொடுத்தார் .

திருவாரூர் தேர் குழு ஒன்றை அமைக்க பெரியவர்கள், முக்கியமானவர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர் . சிலர் , இதற்கான நிதி வெளிநாட்டிலிருந்து வரப்போகிறது , ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் என நினைத்திருந்தனர் போலும் . கூட்டத்தில் தேரோட்டத்திற்கு என்ன என்ன தேவை என்ற பட்டியல் எடுக்கப்பட்டது . வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேலைக்குப் பொறுப்பாக இருந்து கவனிப்பதாக உற்சாகமாக கூறினர் . ஆனால் , அந்த வேலைக்கு இவ்வளவு ரூபாய் தேவை , உடனே இவர்களைக் கொண்டு இந்த வேலை ஆரம்பித்துவிடலாம் என்று ஆலோசனை மிகப் பிரம்மாண்டமாக தயாரானது . வேலைகளைப் பற்றிய பட்டியல் அதற்குத் தேவையான நிதி முதலானவற்றை பட்டியல் எடுத்தாயிற்று.

அடுத்து நிதி ஆதாரத்திற்கு யாரைப் பார்க்கலாம் என்றவுடன் ஒவ்வொருவராக நழுவ ஆரம்பித்தனர் . ஆனாலும் இறைவன் அருளால் பல நல்லவர்கள் கிடைத்தனர். அவர்களுடன் சேர்ந்து பொறுப்பாளர்கள் முடிவு எடுத்து காரியத்தில் இறங்கினர் . இந்த காரியத்தில் முழுமனதுடன் வேலையில் ஈடுபட்டனர் .நாம் எப்படியும் தேரை ஓட வைத்துவிட வேண்டும் என்பது முடிவானது . நம்முடன் நெருக்கமாக இருந்தவர்கள் கோபால்ஜியிடம் அரசாங்கத்திடம் எதுவும் எதிர்பார்க்காமல் செய்திட இறைவன் அருள் புரிவான். ஆனாலும் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் அரசாங்கத்தால் செய்துவிட முடியும், அல்லது இடையூறு செய்ய முடியும் . இந்த நிகழ்ச்சி என்பது மாவட்ட நிகழ்ச்சி என்பதால் இதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதியும் , ஆணையும் வேண்டும் . அரசாங்கத்தை எதிர்த்து கலெக்டர் இறங்க தயக்கம் காட்டுவார் எனவே நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்றனர்.

அப்போது நாத்திகம் பேசிப்பேசி ஊரைக்கெடுக்கும் திமுகவின் ஆட்சி , முதல்வர் கருணாநிதி அவர்கள் . என்ன செய்வது ?, முதல்வருக்கு நெருக்கமானவரைப் பிடித்து , இது கருணாநிதியின் சொந்த ஊர் , இந்த ஊரில் பல்லாண்டுகளாக தேர் ஓடாமல் இருப்பது அவருக்கு பெருமை தரும் விஷயம் இல்லை . ஆனால் தேர் இவரது ஆட்சி காலத்தில் ஓடினால் அதுவே அவருக்கு பெருமையான ஒன்று என்பதை புரியவையுங்கள் என பொறுப்பை அவரிடம் கொடுக்கப்பட்டது. நாம் சொன்ன மாதிரியே முதல்வர் அனுமதி கொடுத்து கலெக்டரை ஒத்துழைக்கச் செய்தார் . அதனால் தான் இன்றும் திமுகவின் சாதனை பட்டியலில், அல்லது தம்பட்ட விஷயத்தில் திருவாரூர் தேரும் இடம் பெறுகிறது. தேரை நிலை நிறுத்த , திருப்ப முட்டுக்கட்டை என்பது பெரிய பெரிய சைஸில் வேண்டும் . அப்படி செய்பவர் நாகூரில் இருக்கிறார் என்றார்கள் . அதற்காக ஒரு சிலர் இறங்கினர் . தேர் பிடித்து இழுக்க பெரிய தாம்புகயிறு தேவை. அதுவும் பெரிய வடம் இது கேரளத்திலிருந்து RSS ஸ்வயம் சேவகர்கள் மூலம் செய்து கொண்டு வர ஏற்பாடானது . அடுத்து தேர் செப்பனிடும் வேலைகள் , தேர் அலங்காரங்கள் என ஒவ்வொன்றும் கவனம் கொடுக்கப்பட்டது .

தேர் இழுக்க வருபவர்களுக்கு உணர்ச்சி கொடுக்க தலையில் காவி துண்டு , இது கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் நெறிப்படுத்தவும் உதவும் என்பதால் அதற்கும் ஏற்பாடு நடந்தது. வெயில் நேரத்தில் தேர் இழுப்பவர்களுக்கு களைப்பு தீர நீர் மோர் , பானகம் , குடி நீர் என ஒவ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வளவு ஏற்பாடுகளுக்கு இடையில் தேர் இழுக்க மக்கள் பெரிய அளவில் கூடவில்லை என்றால்?? அது மட்டுமல்ல நாம் எடுத்திருப்பது இந்து ஒற்றுமை தேரோட்டம் என்பதை மனதில் கொண்டு கோபால்ஜி , மக்கனை வரவேற்க குழுக்கள் ஏற்பாடு செய்து , அவர்கள் கையில் விபூதி , குங்குமம் தனித்தனி கிண்ணத்தில் கொடுக்கப்பட்டது . எந்தெந்த குழு எந்தெந்த காலனிக்கு செல்ல வேண்டும் . போனவுடன் பெரியவர்கள் பாதங்களில் பணிந்து வணங்க வேண்டும் . தேர் இழுக்க குடும்பத்தோடு வாருங்கள் விபூதி , தாய்மார்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும் . வரும்போது தங்களுக்குத் தேவையான சாப்பாட்டை கட்டி எடுத்து வர வேண்டும் என்று சொல்லி அழைக்க வேண்டும். எந்த ஊர் , என்ன தேதியில் வரவேண்டும் என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டது . போன இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு .

உள்ளூர்காரர்கள் எச்சரித்தபடி திராவிடக் கட்சியினர் ஏர் ஓட்டும் உழவன் தவிக்கையிலேயே தேரோட்டம் உனக்கெதற்கடா தியாகேசா என்றும் பெரியார் பூமியில் பார்ப்பனர்களின் தேரோட்டமா ? போன்ற பலவிதமான விளம்பர தட்டிகள் வைத்திருந்தனர் . இத்தகை விளம்பரம் இந்துக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது . பரபரப்பானது தேரோட்டம் நிகழ்ச்சி . மக்களிடம் உற்சாகம் கரைபுரண்டோடியது .

07.05.1989 அன்று கலெக்டர் தலைமையில் அரசு அதிகாரிகள் , காவல்துறை அதிகாரிகள் மக்கள் என்னதான் இழுத்தாலும் தேர் நிலைக்கு வர முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு மேலானத, எனவே , இதில் பிடிவாதம் பிடிக்காமல் புல்டோசர், ஏற்பாடு செய்து விடுகிறோம் என்று சொல்லி கட்டாயப்படுத்தினர் . கோபால்ஜி பிடிவாதமாக மக்களால் இழுக்கப்படுவதுதான் தேரோட்டம் , இறைவன் மனது வைப்பார் எல்லாம் நல்லபடியாக நடக்கும் உறுதியாக கூறினார் .

07.05.1989 அன்று தேரோட்டம் ஆரம்பிப்பதற்கு முன் நமக்கே கொஞ்சம் அச்சத்தை கொடுத்தார் தியாகேசர் . மக்கள் கூட்டம் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக குழுகுழுவாக இருந்தனர் . தேருக்கு சுவாமி வந்தவுடன் ஆவேசமாக ஆரூரா! தியாகேசா! என கோஷம் முழங்கிவுடன் எங்கிருந்துதான் வந்தது இந்த சிவ பூதகணங்கள் எனக் கேட்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது .

இராம கோபாலன் முன்னின்று தேர் வடம் பிடித்து இழுக்க பல பிரமுகர்கள் வந்திருந்தனர் . பன ஓலை விசிறியால் வீச , ஆடி வரும் தேரின் அழகை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அத்தனை கஷ்டமும் கரைந்துபோனது . ஓர் சாலை திருப்பத்தில் தேர் ஓட்டம் குறைய திடீரென்று அதிகாரிகள் கொண்டு வந்த புல்டோசரை வைத்து தள்ள முற்பட்டனர் . கோபால்ஜி சாலையின் குறுக்கே படுத்துவிட்டார் . புல்டோசர் வைத்துதான் தேரை இழுக்க வேண்டும் என்றால் என்மீது ஏற்றிவிட்டுச் செல்லுங்கள் எனக் கூற , மக்களிடையே ஆக்ரோஷம் பிறந்தது. நாங்க இழுக்கிறோம் , புல்டோசரை அகற்றுங்கள் என சப்தமிட்டனர் .

அதிலும் ஒருசோதனை வந்தது. நாம் காலனி , கிராம மக்களை பிரித்து தேதி கொடுத்து அழைத்திருந்தோம். ஆர்வம் மிகுதியால் கிட்டத்தட்ட எல்லோரும் முதல்நாளே வந்துவிட்டனர் . சிவ கணங்களாகி தேரை இழுத்த வேகத்தில் தேரோ ஒரே நாளில் 95 % யாத்திரை முடிந்துவிட்டது . உடனே அதிகாரிகள் ஓடோடி வந்தனர் , கோபால்ஜியிடம் இன்று இத்துடன் போதும் , பல ஊர்களில் இருந்து மக்கள் வர வேண்டியிருக்கிறது , தேர் இன்றே நிலைக்கு வந்து விட்டால் அவர்கள் எல்லோரும் ஏமாற்றமடைவார்கள் , எனக் கேட்டுக்கொண்டார் .

திருவாரூரில் ஒரு வழக்கம் உண்டு , தேர் நிலைக்கு வராமல் ஆண்கள் யாரும் வீட்டில் உறங்கமாட்டார்கள் . எனவே , எல்லோரும் வீட்டுத் திண்ணையில் படுத்தனர். அடுத்த நாள் தேரோட்டம் நிறைவு பெற்றது மட்டுமல்ல , இந்துக்களின் சக்தி , இறைவனின் அருள் ஒன்றுகூடினால் எல்லாம் கைகூடும் என்பதை எல்லோரும் உணர்ந்தனர். கோபால்ஜியிடம் வந்த காலனி மக்கள் குடும்பத்தோடு நெஞ்சம் நெகிழ , எங்களையும் மனிதர்களாக மதித்து எங்க தேரோட்டத்திற்கு மரியாதை அளித்து அழைத்தீர்களே ! எங்கள் செய்த பாக்கியம் ! நெஞ்சுருகி பேசினர்.

கோபால்ஜி , உங்கள் கரங்களில் சுவாமியே இறங்கி வந்து சக்தி கொடுத்துள்ளார் . இந்து முன்னணி இதனைத் தான் சமூகத்தில் சொல்ல விரும்புகிறது . இங்கு பக்தி மட்டுமல்ல , சக்தியும் இருக்கிறது . பக்தியின் மூலம் உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என்ற பேதமில்லை என்று நம்பிக்கை கொடுத்தார் . திருவாரூர் தேரோட்டமானது தமிழகம் முழுவதும் பெரிய எழுச்சியை இந்து சமுதாயத்தில் ஏற்படுத்தியது. இந்து முன்னணி முன்னின்று நடத்திய சாதனையை ஊடகங்கள் , ஆன்றோர்கள் , பெரியோர்கள் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

மேலும் படிக்க