பழனி மலையை
ஆக்கிரமித்த
முஸ்லீம்கள்-
சதியை முறியடித்த
இந்து முன்னணி

பழனி மலையை ஆக்கிரமித்த முஸ்லீம்கள்- சதியை முறியடித்த இந்து முன்னணி

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு சுமார் 60 ஆண்டுகளாக திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் செயல்பட துவங்கினர் .மொத்தம் உள்ள 13 கடைகளில் 10 படிக் கடைகளை முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் முஸ்லீம் கடைகாரர்களுக்கு துணையாக நின்றனர் . முருகப்பெருமானை தரிசிக்க மலை ஏறும் போது வழி நெடுகிலும் முஸ்லீம் கடைகள். எண்ணிப் பாருங்கள் மசூதிக்கு சொந்தமான இடத்தில் இந்துக்கள் கடை வைக்க முடியுமா? இப்படி ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் பக்தர்களை அச்சுறுத்தும் விதமாக கோவிலின் புனிதத்தை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்தனர்.

மலை ஏறும் போது தாய் மார்கள் படிப்பூஜை செய்வது வழக்கம் . படிபூஜை செய்யும் தாய்மார்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பது , அநாகரிகமான ஆபாச வார்த்தைகள் பேசுவது , கிண்டல் கேலி செய்வது , போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் . பக்தர்கள் இவர்களுக்கு பயந்து மலை ஏறும் சூழ்நிலை ஏற்பட்டது .

முஸ்லீம் கடைக்காரர்களின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்தது . வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் மாட்டுக்கறியை மலையின் உச்சிக்கே கொண்டு சென்று சாப்பிடத் தொடங்கினர் . இந்த அநியாயங்களை பார்த்த மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர் .

இவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த இந்து முன்னணி தொண்டர்கள் களம் இறங்கினர் . 2012 ஆம் ஆண்டு பக்ரித் பண்டிகையின் போது படிப்பாதை, மலையின் உச்சி என அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே மறைந்திருந்த இந்து முன்னணி தொண்டர்கள் முஸ்லீம்களின் நடவடிக்கையை கண்காணித்தனர் .

 

வழக்கம் போல மாட்டுப் பிரியாணியை கொண்டு வந்து படிப்பாதை . கோவில் வளாகம் போன்ற இடங்களில் முஸ்லீம்கள் சாப்பிட தொடங்கினர் . மறைந்திருந்த இந்து முன்னணியினர் சுற்றி வளைத்து இவர்களை கையும் களவுமாக பிடித்தனர் . இதனை தொடர்ந்து , இந்த முஸ்லீம் கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் வலு பெற்று போராட்டம் வெடித்தது . வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் தலைமையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. அறநிலையத் துறை அதிகாரிகள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக இந்த வழக்கில் சரியாக வாதாடாமல் காலம் கடத்தி வந்தனர் , அறநிலையத் துறையைச் சேர்ந்த இணை ஆணையர், நிர்வாக அதிகாரியாக பாஸ்கர் என்கிற நேர்மையான அதிகாரி அந்த நேரத்தில் பழனி கோவிலுக்கு புதிதாக பொறுப்பேற்றார் .

நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் ஆதாரங்களை திரட்டி மனு கொடுக்கப்பட்டது . இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரி பாஸ்கர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கான கோப்புகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார் .

நீதி மன்றத்தில் வழக்கு விரைவாக நடைபெற இந்து முன்னணி வழக்கறிஞர்கள் வழக்குகளை கண்காணித்து சரியான பாதையில் வழக்குகள் செல்ல உதவினர் . நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதி மன்ற தீர்ப்பு பழனி முருகனுக்கும் , இந்து சமுதாயத்திற்கும் ஆதரவாக வந்தது .

17.03.2014 க்குள் பழனி முருகன் கோவிலை ஆக்கிரமித்துள்ள 10 முஸ்லீம்கள் கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்து முன்னணியும் போராட்டத்தில் இறங்கியது. வேறு வழி இல்லாமல் முஸ்லீம் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது .

60 ஆண்டுகாளாக பழனி மலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு திட்டமிட்டு ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம்களின் சதி இந்து முன்னணியின் போராட்டத்தால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது .

மேலும் படிக்க