திரு. த.அரசுராஜா

மருத்துவர். திரு. த.அரசுராஜா - முன்னாள் மாநிலத் தலைவர் (தற்போது மாநில பொதுச்செயலாளர்)

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆனந்தன்விளை கிராமத்தில் 12-8-1953-ம் ஆண்டு தெய்வத்திரு.அ.தங்கபாண்டியன் தெய்வத்திரு.த.காசிமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு அந்த துறையில் மருத்துவராக பணிபுரிந்தார். 1982 இந்துமுன்னணி பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய சமுதாய பணியை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சாத்தான்குளம் தாலுகா பொறுப்பாளராக இருந்து அனைத்து கிராம பகுதிகளிலும் இந்துமுன்னணி செல்ல காரணமாக இருந்தார். RSS அமைப்பிப் பயிற்சிகளை கற்றார்.

அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அரசூர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததார். படிப்படியாக மாவட்ட பொறுப்புகளில் இருந்து மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தென்மாவட்டங்களில் இந்துமுன்னணி வளர தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்துமுன்னணி ஆதரவு பெற்ற பாஜக வேட்பாளராக சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டார். 1990 ம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் ஆட்சியில் அயோத்தி ராம ஜென்ம பூமி கர சேவைக்காக சென்ற போது சென்ற போது கைது செய்யப்பட்டு கோரக்பூர் சிறையில் ஒரு மாத காலம் சிறைவாசம் அனுபவித்தார்.