வஜ்ரகிரி மலை - 60 ஏக்கர் - கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு - உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை துவக்கம் - இந்துமுன்னணி

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள வஜ்ரகிரி மலையை , மலை மாதா சர்ச் நிர்வாகத்தால் அரசு புறம்போக்கு நிலம் (சுமார் 60 ஏக்கர்) அபகரிப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் மாவட்ட நிர்வாகத்திடம் 8 வாரங்களுக்குள் சரியான முறையில் சர்வே செய்து அந்த இடத்தின் உண்மையான தகவலை, நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி அறிவித்துள்ளார். அது தொடர்பாக 4-6-2021, வெள்ளிக்கிழமை மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மிக விரைவில் அந்த நிலம் மீட்கப்படும்.